கடந்த 10 நாட்களில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனம் மூலம் திருப்பதி கோவிலுக்கு 40 கோடியை 25 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் கிடைத்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் நேற்று ஒன்றாம் தேதி இரவு 12 மணிக்கு அடைக்கப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருந்த கடந்த 10 நாட்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்கும் சேர்த்து 7 லட்சத்து 76 ஆயிரத்து 930 பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். டிக்கெட் வாங்கியவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 390 சுவாமி பக்தர்கள் கோவிலுக்கு வரவில்லை.
கூடுதலாக தேவஸ்தான ஊழியர்களின் பரிந்துரை அடிப்படையில் 37 ஆயிரத்து 668 பேருக்கும், அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் அடிப்படையிலும், முக்கிய பிரமுகர்களுக்கும் 66 ஆயிரத்து 998 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. வைகுண்ட ஏகாதசி பத்து நாட்களில் 40 கோடியே 25 லட்ச ரூபாய் உண்டியல் வருமானமாக கிடைக்கப்பெற்றது. அதேபோல், 35 லட்சத்து 60 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.