திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம் , ₹ 300 டிக்கெட், சர்வ தரிசனம் , விஐபி தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.
இது தவிர கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுண்டர்களில் ₹ 50 கட்டணம் செலுத்தி இதற்கு முன்பு தேவைப்படும் லட்டுக்களை பெற்று வந்தனர்.
இருப்பினும் லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் ஒரு பக்தருக்கு இரண்டு முதல் நான்கு லட்டுகள் வரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் லட்டு பிரசாதத்தை சில புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனால் இனி ஆதார் கார்டு காண்பித்தால் மட்டுமே ஒரு பக்தருக்கு ஒரு லட்டு கூடுதலாக ₹ 50 விலைக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதிக்கு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்பு தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்களுக்கு லட்டு பிரசாதத்தை கொண்டு சென்று வழங்குவது வழக்கம்.
இதனால் தங்கள் தேவைக்கு காட்டிலும் நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக லட்டு பிரசாதம் வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் திடீரென தேவஸ்தானம் ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு லட்டு மட்டுமே என கட்டுப்பாட்டு விதித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.