ஒப்பந்ததாரர் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகா ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அரசு வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதற்காக 40% கமிஷன் கேட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் குற்றம்சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பாக, தனது நண்பர்களுக்கு, தனது இறப்பிற்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில், அவர் இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…
சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…
This website uses cookies.