திருப்பதி : மதுரையில் இருந்து பக்தர்களை சுற்றுலாவாக திருப்பதிக்கு அழைத்து வந்த தனியார் பேருந்து, கண்டெயினர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மதுரையை சேர்ந்த 15 பேர் காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து பக்தர்களை திருப்பதி மலைக்கு சுற்றுலாவாக ஏற்றி அழைத்து வந்த தனியார் பேருந்து, திருப்பதி-சித்தூர் இடையே உள்ள பனம்பாக்க கிராமம் அருகே கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் பேருந்தின் முன் பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. இதில் பேருந்து ஓட்டுனர் உட்பட முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த 15 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சந்திரகிரி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.