மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் தெலுங்கானாவின் கரீம் நகரை சேர்ந்த முகமது சேஷாத் கான் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணிபுரியும் சூடான் நாட்டை சேர்ந்த நண்பருடன் உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அலி காலி பாலைவனத்திற்கு சமீபத்தில் ஜீப்பில் சென்றிருந்தார்.
அப்போது, மொத்தம் 650 கிலோமீட்டர் பரப்பளவு உடைய இந்த பாலைவனம் நஜ்ரான் மாகாணங்கள் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓமன் மற்றும் ஏமன் வரை நீண்டுள்ளது. இங்குள்ள சூழல்கள் மிகவும் ஆபத்தானது என்பதால், அங்கு பொதுவாக யாரும் செல்வதில்லை.
மொபைல் போனில் உள்ள கூகுள் மேப்பை நம்பி சென்ற அவர்கள் ஆபத்தான இடத்தில் சிக்கி வழி தெரியாமல் தவித்தனர். மேலும், சோதனையாக பேட்டரியும் தீர்ந்ததால் மொபைல் ஃபோனும் வேலை செய்யவில்லை. உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட எதிர்பாராத விதமாக ஜிப்பிலிருந்து எரிபொருளும் தீர்ந்தது.
இதனால், வழி தெரியாமல் எங்கும் செல்ல முடியாமல் சேஷாத் கான் மற்றும் அவரது நண்பர் இருவரும் நான்கு நாட்கள் பாலைவனத்தில் சுற்றித் திரிந்தனர். ஒரு கட்டத்தில் உணவும், தண்ணீரும் இல்லாமல் இருவரும் சோர்வடைந்தனர்.
வெப்பம் உச்சத்தில் இருந்தது மற்றும் கடுமையான சோர்வு காரணமாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் பணிக்கு வராததை அடுத்து, அலுவலகத்தில் இருப்பவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவர்கள் இருவரின் உடல்களும் பாலைவனத்தில் இருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.