எல்லை மீறிய பேச்சு.. கட்டுப்பாட்டோட நடந்துக்கோங்க : பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எஞ்சிய இரு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கடந்த மூன்று கட்ட தேர்தல் நிறைவடைந்த பின்னர் இரண்டு தேசிய கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களின் எல்லை மீறும் தேர்தல் பிரசாரம் தேர்தல் ஆணையத்தை கோபமடைய செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இரு தேசிய கட்சிகளான பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி அறிவுறுத்தியுள்ளது
அதில் பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களின் நட்சத்திர பேச்சாளர்கள் ஜாதி, மத மற்றும் வகுப்புவாத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய எந்த ஒரு பிரசாரமும் மேற்கொள்ளக்கூடாது.
அதனை உடனே நிறுத்த வேண்டும். பிரசாரத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு முறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
காங்., தலைவர் மல்லிகார்ஜூஜ கார்கேவுக்கு எழுதியுள்ள கடித விவரம், நமது ராணுவத்தில் அரசியலை கலக்கும் வகையில் அக்னிவீர் திட்டம் குறித்தும், இந்திய அரசியலமைப்பு சாசனம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் என தரம் தாழ்ந்து பேசுவதையும் நிறுத்த வேண்டும்.
மேலும் படிக்க: லாரி ஓட்டுநரை பட்டாகத்தியால் பதம் பார்த்த கும்பல்.. மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பரபரப்பு : நடுங்கிய வேலூர்!
இது போன்ற தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய பிரசாரத்தை காங்கிரஸ் நட்சத்திர பிரச்சாரகர்கள் வெளியிடக்கூடாது அரசியல் சாசனத்தை விமர்சிக்கக்கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.