பஞ்சாப் ; அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில், பெண் ஒருவர் தனது முகத்தில் தேசியக் கொடியை வரைந்து விட்டு, பொற்கோவிலுக்கு செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், அந்தப் பெண்ணை உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இது இந்தியா இல்லையா..? என்று கேட்கிறார். அதற்கு அந்த காவலர் இல்லை இது பஞ்சாப் என்று சொல்கிறார்.
இதனால், கடுப்பான அந்தப் பெண் மீண்டும் மீண்டும் இது இந்தியா எல்லை என்று கேட்க, அவரோ இல்லை என்பது போல தலையசைக்கிறார். நடந்த இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த அந்தப் பெண்ணின் செல்போனை பறிக்க அந்தக் காவலர் பறிக்க முயற்சிக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அந்த அதிகாரியின் செயலுக்கு பொற்கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த சின்னத்தில் அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல, அரசியல் கொடியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.