திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் அனுப்ரதா மொண்டல், கால்நடைகளை கடத்திய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் அசன்சால் மாவட்ட சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் சக்கரவர்த்திக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘இந்த வழக்கில் அனுப்ரதா மொண்டலுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்படவில்லை எனில், உங்கள் குடும்பத்தார் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலி வழக்குப் பதிவு செய்யப்படும்’ என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திரிணமுல் காங்கிரசை சேர்ந்த பப்பா சட்டர்ஜி என்பவரது பெயரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார். தன் பெயரில் யாரோ போலியாக கடிதம் அனுப்பி உள்ளதாக பப்பா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, பஸ்சிம் வர்த்தமான் மாவட்ட நீதிபதியிடம் சிறப்பு நீதிபதி ராஜேஷ் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.