தெலுங்கானா : கூலித் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் சாயம்பேட்டை மண்டலம் மந்தாரபேட்டை அருகே கோர சாலை விபத்து ஏற்பட்டது. பத்திபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 கூலித்தொழிலாளர்கள் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டம் மோகுள்ளபள்ளி மிளகாய்த் தோட்டத்தில் பணிபுரிய வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் 3 பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழக்க 7 பேர் தீவிர காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரகால போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வரங்கள் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலி வேலைக்கு என்று சக தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பத்தி பாக்கம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.