தெலுங்கானா : கூலித் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் சாயம்பேட்டை மண்டலம் மந்தாரபேட்டை அருகே கோர சாலை விபத்து ஏற்பட்டது. பத்திபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 கூலித்தொழிலாளர்கள் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டம் மோகுள்ளபள்ளி மிளகாய்த் தோட்டத்தில் பணிபுரிய வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் 3 பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழக்க 7 பேர் தீவிர காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரகால போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வரங்கள் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலி வேலைக்கு என்று சக தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பத்தி பாக்கம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.