தெலுங்கானா: சாதிப்பதற்கு முயற்சியை தவிர வேறு எதுவும் தடையாக இருக்க முடியாது என ஒட்டி பிறந்த தலையுடன் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்த சகோதரிகள்.
தெலுங்கானா மாநில மகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் வீனா,வாணி. கடந்த 2005ஆம் ஆண்டு தலை ஒட்டிய நிலையில் இரண்டு பேரும் பிறந்தனர். தலையில் அறுவை சிகிச்சை செய்து இரண்டு பேரையும் பிரிக்க ஏராளமான அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்தால் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
எனவே பிறந்தது முதல் ஒட்டிய தலையுடன் சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு ஏற்பாடாக தெலுங்கானா மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் ஆசிரியர்கள் சகோதரிகளின் வீட்டுக்கு சென்று தினமும் பாடம் நடத்தி வந்தனர்.
12ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு பேரும் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வின் போது ஒட்டிய நிலையில் பிறந்த தலையுடன் தனித்தனியாக தேர்வு எழுதினர்.
நேற்று தேர்வு முடிவுகளை தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்திரா ரெட்டி வெளியிட்டார். தேர்வு முடிவுகளில் வீணா 9.3 சதவிகித மதிப்பெண்களும், வாணி 9.2 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்த தெரியவந்தது.
அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். முதல் வகுப்பில் இருந்து இதுவரை இருவரும் எழுதிய தேர்வில் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.