ராஜஸ்தானில் உதய்பூர் படுகொலை சம்பவத்தில் கைதான குற்றவாளி ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்து சென்ற போது பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
நபிகள் நாயகம் குறித்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதால், கன்னையா லாலை கொன்றதாக வீடியோவில் கொலையாளிகள் கூறியுள்ளனர். இந்தப் படுகொலை, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நுபுர் ஷர்மாவிற்கு ராஜஸ்தானில் உள்ள உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால் என்பவர் ஆதவராக கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கடந்த மாதம் 28ம் தேதி பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கன்னையா லால் கொல்லப்பட்டார். கொலையாளிகள் கொலை செய்வதை, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்தக் கொலையில் ஈடுபட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். மேலும், மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று கைதான குற்றவாளிகளில் ஒருவனர ஜெய்ப்பூர் தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் சிறைக்கு வேனில் கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் குற்றவாளியை சரமாரியாக தாக்கி அவனது சட்டையை கிழித்தனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவனை பாதுகாப்பாக வேனில் ஏற்றி சிறைக்கு கொண்டு சென்றனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.