வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்காளத்தின் ஜங்கிபுர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜாகிர் ஹசன். இவருக்கு கொல்கத்தா, முர்ஷிதாபாத், டெல்லி உள்பட பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன.
இந்நிலையில், எம்.எல்.ஏ. ஜாகிர் ஹசன் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த புதன்கிழமை மாலை வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பல மணிநேரம் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையின் முடிவில் எம்.எல்.ஏ. ஜாகிர் ஹசன் வீட்டில் இருந்து 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னாள் மந்திரி பார்தா சடர்ஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 50 கோடி ரூபாய் பணம், நகை பறிமுதல் செய்யபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
This website uses cookies.