உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த கோர தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொராதாபாத் நகரில் செயல்பட்டு வந்த 3 மாடிக் கட்டிட திருமண மண்டபத்தில், விஷேஷத்தையொட்டி உற்றார், உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது, மண்டபத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்து மண்டபத்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு அனைவரும் வெளியேற முற்பட்டனர். மேலும், தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இருப்பினும், அவர்கள் வருவதற்குள் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
இதனிடையே, 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிய 5 பேரை பத்திரமாக மீட்டனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவுதான் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.