உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த கோர தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொராதாபாத் நகரில் செயல்பட்டு வந்த 3 மாடிக் கட்டிட திருமண மண்டபத்தில், விஷேஷத்தையொட்டி உற்றார், உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது, மண்டபத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்து மண்டபத்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு அனைவரும் வெளியேற முற்பட்டனர். மேலும், தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இருப்பினும், அவர்கள் வருவதற்குள் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
இதனிடையே, 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிய 5 பேரை பத்திரமாக மீட்டனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவுதான் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.