அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டி எடுத்து வந்தால் ரூ.10 கோடி பரிசு ; வடமாநில சாமியார் சர்ச்சை அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 6:37 pm

சனாதனத்தை அழிப்பேன் எனக் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று வடமாநில சாமியார் ஒருவர் சர்ச்சை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்தக் கருத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்நிலையங்களிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Udhayanidhi - Updatenews360

இந்த நிலையில், சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ. 10 கோடி பரிசை உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா எனும் சாமியார் அறிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!