ஆந்திரா : போலீஸிடம் இருந்து தப்புவதற்காக ஏரியில் குதித்த சங்கிலி பறிப்பு கொள்ளையன் வசமாக சிக்கினான்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புக்கராயசமுத்ரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான்.
சங்கிலியைப் பறிகொடுத்த பெண் எழுப்பிய அபயக் குரலை கேட்டு அந்தப் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருடனை விரட்டி சென்றனர்.
போலீசார் தன்னை தொடர்ந்து விரட்டி வருவதைப் பார்த்த திருடன் போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக அந்த பகுதியில் உள்ள ஏரியில் குதித்து விட்டான். ஆனாலும் விடாமல் விரட்டி சென்ற போலீசார் ஏரியிலிருந்து திருடனை மீட்டனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்கள் பாணியில் விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.