வாரணாசி : கடந்த 2006ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006ல் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் உள்ள ரயில்நிலையம், கோவில் உள்ள இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்பு காரணம் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான, பயங்கரவாதி முகம்மது வலியுல்லா கான் கைது செய்யப்பட்டான்.
இது தொடர்பான வழக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 4ம் தேதி நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியான முகம்மது வலியுல்லா கான் குற்றவாளி என அறிவித்தது.
இந்த நிலையில், பயங்கரவாதி வலியுல்லாகானுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.