மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோர் மாவட்டம் பதாமி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சித்தராமையா. இவர் தனது தொகுதியில் நடந்த மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.2 லட்சத்தை வழங்கினார்.
ஆனால், அவர் வழங்கிய பணத்தை பெற்றுக் கொள்ளாத பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், அதனை சித்தராமையா செல்லும் வாகனத்தின் மீது தூக்கி ஏறிந்து, தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது, பணம் எங்களுக்கு வேண்டாம், சட்டம் ஒழுங்கு சீரடைந்து, அமைதி திரும்பினால் போதும் என்று கூறினார்.
அந்த சமயம் காரில் அமர்ந்தவாறு, அந்தப் பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு சமாதானம் செய்ய சித்தராமையா முயன்றார். ஆனால், அவர் பணம் வேண்டாம் எனக் கூறி வாகனத்தின் பின்னால் தூக்கி எறிந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா அவமதிக்கப்பட்டது, அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.