கேரள மாநிலம் பாலக்காட்டில் கிராம கள உதவியாளர் குடியிருப்பில் மேற்கொண்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் மறைத்து வைத்திருந்தது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பாலக்கயம் கிராம கள உதவியாளர் சுரேஷ்குமார் என்பவர் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, அவரது குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் மற்றும் புதிய ஆடைகள், தேன், குடம்புளி உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் புதிதாக கட்டும் வீட்டுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் லஞ்சம் வாங்கியதாக போலீசாரிடம் விசாரணையின் போது கூறியுள்ளார்.
சமீப கால லஞ்ச ஒழிப்புத் துறையினரின் வரலாற்றில் சாதாரண ஒரு ஊழியரிடம் அதிக அளவுத் தொகை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவமாக இச்சம்பவம் விளங்குகிறது. இவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை சிறையில் அடைத்ததோடு, தொடர்ந்து அவரை விசாரணை மேற்கொள்வதற்காக காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
This website uses cookies.