ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூரில் உள்ள இம்பால் நகரத்திற்கு சென்றார் அங்கிருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.
தொடர்ந்து, நாளை இம்பாலில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மணிப்பூரின் சுராசந்த்பூர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக சென்ற போது ராகுல் காந்தியின் கான்வாயை பஷ்ணுபூரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறையின் மையப்பகுதியான சுராசந்த்பூருக்கு ராகுல் சென்று கொண்டிருந்தார். போலீசார் அவரை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.
ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “பிஷ்ணுபூர் அருகே ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. எங்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் கூறுகின்றனர். எங்களை ஏன் தடுத்தார்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்று கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.