விஸ்வரூபம் எடுக்கும் ஐடி ரெய்டு… சிக்கலில் துணை முதலமைச்சர் : மத்திய அரசு மீது பழி?!!
கர்நாடக துணை முதல்வரும் , அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சுமார் 7.4 கோடி ரூபாய் கணக்கில் வராமல் இருந்ததாக கூறப்பட்டது.
இதனை அடுத்து சட்டவிரோத பணபரிவர்தனைகளை விசாரிக்கும் அமலாக்கத்துறையின் பரிந்துரையின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து தங்கள் விசாரணையை தொடர்ந்தது.
இந்த சிபிஐ விசாரணையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுகிறது எனவே சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் வழக்கு தாக்கல் செய்து இருந்தார் .
டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நடராஜன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு , இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி, இந்த வழக்கிற்கு சிபிஐ விசாரிக்க தடையில்லை இன்னும் 3 மாதத்திற்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இது தொடர்பாக இன்று, செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், இந்த வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவேன். நமது நாட்டின் சட்டத்தை மதிக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பது எனக்கு தெரியும். நான் எந்த தவறும் செய்யவில்லை. என் ஆவணங்கள் சுத்தமாக உள்ளன. நான் தவறு செய்யாதவன். இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.