பஞ்சாப் ; இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. அடாரி இந்தியாவுக்கும், வாகா பாகிஸ்தானுக்கும் எல்லையாக இருந்து வருகிறது. இந்தப் பகுதி தான் இருநாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் இடமாகும். எல்லைப் பகுதியில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களின் போது தேசிய கொடிய ஏற்றுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்தியா -பாகிஸ்தான் வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது.
இதனைக் காண்பதற்காக வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். அப்போது, ஜெய்ஹிந்த என்று விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் முழக்கமிட்டனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.