ராகுல் கேள்விகளுக்கு பதிலடி காத்திருக்கு.. நாளை உரையாற்றும் பிரதமர் மோடி : ராஜ்நாத் சிங் பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 9:12 pm

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதில் அளித்து உரையாற்றி இருந்தார்.

அதனை தொடர்ந்து, மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க கோரி மக்களவையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷா கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அனைத்து பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனை அடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நாளை பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அவர் நிச்சயம் பிரதமர் மோடி பதிலடி கொடுப்பார் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ