மறுபடியும் முதல்ல இருந்தா? பரவும் அரிய வகை கொரோனா : அறிகுறிகள் இதுவா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

ஊரடங்கு, மாஸ்க், பாதிப்பு, பலி என கொரோனா கால வாழ்க்கையை மக்கள் இப்போது தான் மறந்து வருகின்றனர்.

ஆசுவாசப்படுத்தி வரும் நிலையில் மக்களை மீண்டும் கவலைக்குள் ஆழ்த்த கொரோனா புதிய திரிபான eris குறித்த செய்தி குழப்பத்தை விளைவித்துள்ளது.

கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜுலையில் 70ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி 115ஆக அதிகரித்தது. மே மாதம் இந்த புதிய திரிபு கண்டறியபட்டது.

இரண்டு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் கவனிக்கும்படியாக எந்த வித மாற்றத்தையும் இந்த திரிபு கொண்டுவரவில்லை. ஆனால் கோவிட் பாதிப்பாலும், தடுப்பூசியாலும் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி சற்று குறைந்திருக்கும் என்பதால் இந்தியா எச்சரிக்கையோடு இதை அணுகுவது நல்லது என்கின்றனர் சில மருத்துவர்கள்.

மருத்துவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம் உள்ளது. முதலில் பிரிட்டனில் தான் இந்த திரிபு கண்டுபிடிக்கபட்டது. அந்நாட்டில் மூத்த குடிமக்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவில் இந்த பாதிப்பு இருந்தது.

இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையோடு அணுக வேண்டும் எனவும், பூஸ்டர் ஷாட்களை எடுத்துகொள்ளவெண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புதிய மாறுபாடு குறித்த கவலை என்பது பல காரணிகளை அடிப்படையாக கொண்டது. முதலில் அதன் பரவும் தன்மை, அடுத்து அதன் தீவிரம் இறுதியாக அவற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் செயல்திறன் ஆகியவற்றை பொருத்தது.

வைரஸ்கள் பொதுவாகவே உருமாறும் திறன் கொண்டது என்பதால் புதிய திரிபு வருவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே உண்டு. இப்போதைய உருமாற்றம் அடைந்த eris வகை உலக சுகாதார அமைப்பால் உற்றுநோக்கப்பட்டுவருகிறது. இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி குறைந்து வருகின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

சளி, இருமல்,காய்ச்சல், உள்ளிட்டவையே இவற்றின் அறிகுறிகளாக உள்ளன. பொதுவாக உருமாறும் திரிபுகள் அதிகம் பரவக்கூடியவையாக இருக்கும். ஆனால் இது ஒமைக்ரான் வகையை சேர்ந்தது என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் கருதலாம். இருப்பினும் சுகாதாரமாக இருப்பது, முககவசம் அணிதல், வெளியே சென்று வந்தால் முறையாக கை கழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுவது முன்னெச்சரிக்கையாக பலன் தரும். தவிர டெங்கு, மலேரியா போன்ற பிற காய்ச்சல்களும் அதிகம் ஏற்படும் காலம் இது என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

13 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

13 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

14 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

14 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

15 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

15 hours ago

This website uses cookies.