Categories: இந்தியா

வயநாடு நிலச்சரிவு: பாட்டியையும் சிறுவனையும் காத்த யானை – கண்ணீர் கதை!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பாட்டி மற்றும் அவரது பேத்தி, சிறுமி இருவரும் வெள்ளத்தில் அடித்து ஒரு காட்டு பகுதியில் சிக்கியுள்ளனர்.

அந்த நேரத்தில் அந்த காட்டு பகுதியில் இருந்து யானை ஒன்று வந்து அந்த பாட்டியையும் அவருடைய பேரப்பிள்ளைகளை காப்பாற்றியுள்ளது. இதுகுறித்து உயிர் பிழைத்த அந்த பெண் பேட்டியில் கூறியதாவது,”எனக்கு பேச கூட முடியவில்லை… அங்கேயும் இங்கேயும் கடல் போல் தண்ணீர் வந்தது. எங்கள் வீட்டு வார்பு (காண்கிர்ட் தலம்) விழுந்தது.

நான் சமையல் புகைக்கூண்டை பிடித்து மேலேறினேன். அப்போது என் பேரப்பிள்ளை என்னை காப்பாற்றுங்கள் என்றான். பேரனின் விரல் பிடித்து இழுத்து எடுத்து உடைந்த வார்ப்பில் இருந்து அவனை மீட்டேன். அப்போது இரண்டு நிலைகள் கொண்ட வீடு இடிந்து வந்துகொண்டிருந்தது. கஷ்டப்பட்டு மேலேறினோம். அங்கே மிக பெரிய கொம்பன் நின்று கொண்டிருந்தது என்றார்.

செய்தியாளர் உடனே யானையா? என கேட்டதற்கு… அந்த பெண், ஆமாம்…. நான் யானையிடம், “நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உயிர் பிழைத்து வருகிறோம். எங்களை பார் என்று கூறினேன். உடனே கொம்பனின் இரண்டு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதன் கால்களுக்கு நடுவே இரவு முழுக்க விடியும் வரை இருந்தோம்.

அந்த காட்டு யானை எங்களை ஒன்றும் செய்யாமல் இரவு முழுவதும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. மறுநாள் காலை மீட்பு படையினர் கண்ணில் பட்ட என்னையும், என் பேத்தி பேரன்களையும் உடனே மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர் என கேரள ஊடகம் முன்பாக பேட்டி கொடுத்துள்ளனர்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும்போது….வன விலங்குகளுக்கும் சுக துக்கங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. எந்த உயிரினமும் மனிதர்களை எதிரிகளாய் நினைப்பதில்லை (நம்மால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வரை) என்பது உணர முடிகிறது.

Anitha

Recent Posts

ஜாமீன் வேணுமா? அமைச்சர் பதவி வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…

23 minutes ago

கதவை சாத்திக்கொண்ட அமிதாப் பச்சன்! விடாமுயற்சியால் வந்த வினை! இவருக்கா இப்படி ஆகணும்?

படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…

55 minutes ago

பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…

1 hour ago

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; ஆந்திர சுற்றுலாத்துறை அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம்…

2 hours ago

நான் ஆடையில்லாம வந்தேன்னு? என்னென்னமோ பேசுறீங்க?- கொதித்தெழுந்த வடிவேலு…

ராஜ்கிரண் அழைத்து வந்த வடிவேலு தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக மதுரைக்குச் சென்றிருந்தபோதுதான் வடிவேலுவை முதன்முதலில் சந்தித்தார் ராஜ்கிரண். மீண்டும்…

2 hours ago

நெட்பிலிக்ஸை விரட்டியடிக்காம தூங்கமாட்டாங்க போலயே- நயன்தாராவால் மீண்டும் வந்த வினை?

நயன்தாராவால் வந்த வினை விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை  நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு…

3 hours ago

This website uses cookies.