கேரளா: கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை கட்டுக்குள் வந்தாலும் கடந்த சில நாட்களாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை பல்வேறு மாநிலங்கள் கட்டாயமாக்கியுள்ளது.
குறிப்பாக, தென்னிந்தியாவிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்கள், பணியிடங்கள் மற்றும் போக்குவரத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் தண்டனைகளும் அபராதமும் விதிக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.