மேற்கு வங்கத்தில் கால்நடை கடத்தல் வழக்கில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பீர்பும் மாவட்டத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அனுபிரதா மொண்டல். இவர், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரும் கூட ஆவார்.
இந்நிலையில், பீர்பும் நகரில் உள்ள அனுபிரதா மொண்டலின் இல்லத்திற்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், கால்நடை கடத்தல் வழக்கில் அவரை கைது செய்தது. அதிகாரிகள் நேராக அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த 5ம் தேதி கால்நடை கடத்தல் வழக்கில் மொண்டலுக்கு, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அதில், கொல்கத்தா நகரிலுள்ள நிஜாம் பேலஸ் பகுதியில் அமைந்த சி.பி.ஐ. அலுவலகத்தில் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்து இருந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தளபதி ஒருவரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து இருந்தது. அவரிடம் நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் அனுபிரதா மொண்டலின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.
ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமன ஊழலில் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளரும், நடிகையுமான ஆர்பிடா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அடுத்த அதிரடியாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.