மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ‘இண்டியா’யில் தற்போது விரிசல் ஏற்பட்டு, ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறி இண்டியா கூட்டணி கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
இண்டியா கூட்டணியில் இருந்து மூவரும் வெளியேற காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மால்டாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை கொடுக்க நான் தயாராக இருந்தேன். அந்த 2 தொகுதியிலும் அவர்களை வெற்றி பெறச் செய்யவும் தயாராக இருந்தேன். ஆனால் அவர்கள் கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். இப்பொழுது சொல்கிறேன் அவர்களுக்கு ஒரு சீட்டு கூட நான் கொடுக்க மாட்டேன், எனக் கூறினார்.
மேலும், நாளைக்குள் மாநிலத்தின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் மத்திய அரசு வழங்கவில்லை எனில், பிப்ரவரி 2ம் தேதி முதல் தர்ணா நடத்துவேன், எனக் கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.