மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் – புருலியா மாவட்டத்தில் சாதுக்கள் மீது ஒரு மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக ஐடி குழும தலைவர் அமித் மாலிவியா, “மேற்கு வங்கத்தில் திரிணாமுல காங்கிரஸ் கட்சி தொடர்புடைய குற்றவாளிகளால் சாதுக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மம்தா ஆட்சியில் ஷாஜஹான் ஷேக் ஆகிய பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. மேற்குவங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம்,” எனக் கூறினார்.
அதேபோல, மேற்குவங்கத்தில் விசாரணை அமைப்புகள் முதல் சாதுக்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
This website uses cookies.