மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமில் நடந்த பொதுக்கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் அகில் கிரி கலந்து கொண்டார்.
அப்போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராகவும், அவரை உருவ கேலி செய்யும் வகையிலும் அவர் பேசினார்.
அதாவது, “நான் அழகாக இல்லை என்று சுவேந்து அதிகாரி கூறுகிறார். இதை சொன்ன அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள். உங்கள் ராஷ்டிரபதி எப்படி இருக்கிறார்? நாங்கள் அவர்களின் தோற்றத்தை மதிப்பிடுவதில்லை. குடியரசு தலைவரின் நாற்காலியை மதிக்கிறோம்,” என்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அகில் கிரி கடும் கண்டனங்களை சந்தித்து வருகிறார். மேலும், பாஜகவினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை உருவ கேலி செய்ததாக, மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரியை கைது செய்யக்கோரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு பாஜக எம்பி சௌமித்ரா கான் புகார் மனு அளித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.