மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமில் நடந்த பொதுக்கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் அகில் கிரி கலந்து கொண்டார்.
அப்போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராகவும், அவரை உருவ கேலி செய்யும் வகையிலும் அவர் பேசினார்.
அதாவது, “நான் அழகாக இல்லை என்று சுவேந்து அதிகாரி கூறுகிறார். இதை சொன்ன அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள். உங்கள் ராஷ்டிரபதி எப்படி இருக்கிறார்? நாங்கள் அவர்களின் தோற்றத்தை மதிப்பிடுவதில்லை. குடியரசு தலைவரின் நாற்காலியை மதிக்கிறோம்,” என்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அகில் கிரி கடும் கண்டனங்களை சந்தித்து வருகிறார். மேலும், பாஜகவினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை உருவ கேலி செய்ததாக, மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரியை கைது செய்யக்கோரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு பாஜக எம்பி சௌமித்ரா கான் புகார் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.