வீடு, எருமை, தாலி.. என்ன பிரதமரே இப்படி விரக்தியில் பேசறீங்க : ராகுல் காந்தி ATTACK!

வீடு, எருமை, தாலி.. என்ன பிரதமரே இப்படி விரக்தியில் பேசறீங்க : ராகுல் காந்தி ATTACK!

மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்து அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களும் அனல் பறக்க ஆரம்பித்து விட்டன.

ஏற்கனவே காங்கிரசின் தேர்தல் அறிக்கைகளை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் அறிவித்த , சாதிவாரி கணக்கெடுப்பு , அதற்கு பிறகான இடஒதுக்கீடு விகிதத்தில் மாற்றம், நில உச்சவரம்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை, பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறது.

பிரதமர் மோடி கூறுகையில், காங்கிரஸ் உங்கள் சொத்துக்களை பறிக்க பார்க்கிறது. நீங்கள் இரண்டு எருமை மாடுகள் வைத்து இருந்தால் அதில் ஒன்றை காங்கிரஸ் பறித்து கொள்ளும் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரசுக்கு எதிரான பிரதமர் மோடியின் விமர்சனங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தை மறந்துவிட்டார்.

மேலும் படிக்க: மாடியில் இருந்து திடீரென குதித்து கல்லூரி மாணவி தற்கொலை… கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

உங்கள் வீட்டை காங்கிரஸ் பறித்துவிடும். பெண்களிடம் உள்ள தாலியை காங்கிரஸ் பறித்துவிடும். காங்கிரஸ் உங்கள் எருமைகளை பறித்துவிடும் என கூறி வருகிறார்.

உண்மையில் பாஜகவிடம் இருந்து 300இல் 150-க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் பறித்து ஆட்சி அமைக்க்கும் என்பதால் நரேந்திர மோடி இதுபோன்ற தவறான, பொய்யான விஷயங்களை தொடர்ந்து கூறி வருகிறார். தோல்வி பயத்தில் பிரதமர் என்ற கண்ணியத்தை மறந்து, ‘பொய்களின் இயந்திரமாக’ மோடி மாறிவிட்டார்.

I.N.D.I.A அரசு பொதுமக்களிடம் இருந்து எதையும் எடுக்காது. அவர்களுக்கு கொடுக்கவே செய்யும். மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு செலவழித்த அதே தொகை மக்களுக்கு கொடுக்கப்படும் . நமது அரசு அதானிகளின் ஆட்சியாக இருக்காது, இந்தியர்களின் ஆட்சியாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

5 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

6 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.