தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரியும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த 3 முறையாக கஜ்வேல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள போதும் கஜ்வேல் தொகுதி பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கஜ்வேல் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி தொழிலாளர்கள் சந்திரசேகரராவை காணவில்லை அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தொகுதி முழுவதும் போஸ்டர்களை ஒட்டினர். மேலும் சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.சந்திரசேகர ராவ் அவரது முகாம் அலுவலகம், இந்திரா பார்க், சவுரஸ்தா பஸ் நிறுத்தம், அம்பேத்கர் சதுக்கம், கஜுவேல் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியவில்லை என போஸ்டரில் கூறியிருந்தனர்.
மேலும் காணாமல் போன சந்திரசேகரராவை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்திரசேகரராவை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.