ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் கட்டி இடிபாடுகள் மற்றும் பாறைகள் நிறைந்த தரையில் அவரது கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் படமாக்கப்பட்ட 40 வினாடிகள் கொண்ட வீடியோவில், தாக்குதலை பதிவு செய்யும் நபர் உட்பட மூன்று பேர் காணப்படுகின்றனர், ஆனால் அவர்களில் யாரும் இந்த தாக்குதலை நிறுத்த முன்வரவில்லை.
தாக்குதலுக்குப் பிறகு, ஆண் கீழே இறங்கி, காயமடைந்த பெண்ணின் மீது நிற்கிறார், அவர் கடுமையான வலியால் அழுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.பஞ்சௌடி காவல் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் கூறுகையில் குற்றம் சாட்டப்பட்ட பிரேமராம் மேக்வால் (32) தனது மனைவி சுமித்ராவை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி பின்னால் இழுத்துச் செல்வதற்கு முன்பு அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த பெண் தற்போது தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார். ஆனால் இந்த தாக்குதல் குறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்யவில்லை.
மேக்வால் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அவரது மனைவியை அடிக்கடி தாக்கியதாகவும் அவரது அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் அவர் மனைவியை கிராமத்தில் யாரிடமும் பேச விடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என போலீசார் தெரிவித்தனர். ஜெய்சால்மரில் உள்ள தனது சகோதரியை பார்க்க அந்த பெண் விரும்பியதாகவும் அதனால் கணவர் தனது மனைவியைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.