தண்ணீர் குட்டையில் குட்டியை தாக்க வந்த முதலையிடம் இருந்து குட்டியை தாய் யானை போராடி மீட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது பந்திப்புர் புலிகள் சரணாலயம். அங்கு கோடை காலத்தையொட்டை வனவிலங்குகளின் தேவைக்காக குட்டை ஒன்றில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் தனது குட்டியுடன் யானை ஒன்று தண்ணீர் குடிக்க சென்றது.
தண்ணீரைக் கண்டவுடன் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக, குட்டி யானை குட்டையில் குதித்து விளையாடத் தொடங்கியது. தாய் யானையும் குட்டி விளையாடுவதை ஆனந்தமாக பார்த்தபடி, தும்பிக்கையால் தண்ணீரை எடுத்து, குட்டியின் மீது தெளித்துக் கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பார்பாரத விதமாக குட்டையில் பதுங்கியிருந்த பெரிய முதலை ஒன்று, குட்டி யானையை கவ்வி பிடிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் யானை, உடனடியாக முதலையை காலால் ஆவேசமாக மிதிக்கத் தொடங்கியது. ஆனால், யானையின் கோபத்தை புரிந்து கொண்ட முதலை, நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது.
இதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த உலகில் குழந்தை மீது தாயின் அன்பை விட வேறு எதுவும் பெரிதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.