தண்ணீர் குட்டையில் குட்டியை தாக்க வந்த முதலையிடம் இருந்து குட்டியை தாய் யானை போராடி மீட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது பந்திப்புர் புலிகள் சரணாலயம். அங்கு கோடை காலத்தையொட்டை வனவிலங்குகளின் தேவைக்காக குட்டை ஒன்றில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் தனது குட்டியுடன் யானை ஒன்று தண்ணீர் குடிக்க சென்றது.
தண்ணீரைக் கண்டவுடன் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக, குட்டி யானை குட்டையில் குதித்து விளையாடத் தொடங்கியது. தாய் யானையும் குட்டி விளையாடுவதை ஆனந்தமாக பார்த்தபடி, தும்பிக்கையால் தண்ணீரை எடுத்து, குட்டியின் மீது தெளித்துக் கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பார்பாரத விதமாக குட்டையில் பதுங்கியிருந்த பெரிய முதலை ஒன்று, குட்டி யானையை கவ்வி பிடிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் யானை, உடனடியாக முதலையை காலால் ஆவேசமாக மிதிக்கத் தொடங்கியது. ஆனால், யானையின் கோபத்தை புரிந்து கொண்ட முதலை, நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது.
இதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த உலகில் குழந்தை மீது தாயின் அன்பை விட வேறு எதுவும் பெரிதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
This website uses cookies.