ஆந்திரா அருகே லிப்ட் கேட்பதைப் போல நடித்து பலாத்கார நாடகமாடி, பணப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத் அருகே இருக்கும் சாஸ்திரிபுரத்தைச் சேர்ந்த 30 வயதான சுமையா சுல்தானா என்பவர், தனியாக காரில் வரும் ஆண்களை குறிவைத்து லிப்ட் கேட்டு ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். காரில் ஏறியவுடன் பேச்சில் அவர்களை மயக்குவது போல பேசி வலையில் வீழ்த்துவார்.
பின்னர், சிறிது தூரம் அவர்களுடன் காரில் பயணிக்கும் சுமையா, திடீரென தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிப்பேன் என ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இவரது மிரட்டலுக்கு பயந்து போன ஓட்டுநர்கள், புகார் ஏதும் அளிக்காமல் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு, தப்பிச்சோம் டா சாமி என்று கிளம்பி விடுவார்கள்.
இது சுமையா சுல்தானாவுக்கு சாதகமாக மாறிப் போனது. இந்தநிலையில், வழக்கம் போல ஒரு கார் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு பயணிக்கும் போது, தன்னுடைய பாணியில் சேலையைக் கிழித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஓட்டுநர் பணம் தர மறுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், பல ஓட்டுநர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி போலீசாரிடம் சிக்க வைத்ததும், பலரிடம் பணம் பறித்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.