ஆந்திரா அருகே லிப்ட் கேட்பதைப் போல நடித்து பலாத்கார நாடகமாடி, பணப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத் அருகே இருக்கும் சாஸ்திரிபுரத்தைச் சேர்ந்த 30 வயதான சுமையா சுல்தானா என்பவர், தனியாக காரில் வரும் ஆண்களை குறிவைத்து லிப்ட் கேட்டு ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். காரில் ஏறியவுடன் பேச்சில் அவர்களை மயக்குவது போல பேசி வலையில் வீழ்த்துவார்.
பின்னர், சிறிது தூரம் அவர்களுடன் காரில் பயணிக்கும் சுமையா, திடீரென தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிப்பேன் என ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இவரது மிரட்டலுக்கு பயந்து போன ஓட்டுநர்கள், புகார் ஏதும் அளிக்காமல் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு, தப்பிச்சோம் டா சாமி என்று கிளம்பி விடுவார்கள்.
இது சுமையா சுல்தானாவுக்கு சாதகமாக மாறிப் போனது. இந்தநிலையில், வழக்கம் போல ஒரு கார் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு பயணிக்கும் போது, தன்னுடைய பாணியில் சேலையைக் கிழித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஓட்டுநர் பணம் தர மறுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், பல ஓட்டுநர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி போலீசாரிடம் சிக்க வைத்ததும், பலரிடம் பணம் பறித்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.