கேரளா ;திருவனந்தபுரத்தில் ஆண்வேடம் அணிந்து வந்து மாமியாரின் கால்களை மருமகள் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் வாசந்தி. கடந்த 9ம் தேதி பால் வாங்குவதற்காக சென்ற போது, அந்த வழியாக வந்த ஆண் ஒருவர் வழிமறித்து இரும்பு கம்பியால் காலிலும், தலையிலும் தாறுமாறாக தாக்கியுள்ளார். இதில், அவரது கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து தாக்கிய நபர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து, கால் முறிந்த வாசந்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் வேடமிட்ட பெண் ஒருவர், தாக்குதல் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வீட்டில் இருந்தவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில், தனது கணவனின் சட்டை மற்றும் பேண்டடை அணிந்து கொண்டு, முகமூடியை அணிந்து சென்று வாசந்தியை அவரது மருமகள் சுகன்யா தாக்கிய தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் ரெதீஷ்குமார் குடிக்கு அடிமையாகியதாகவும், தினமும் வீட்டிற்கு வந்து தன்னை தாக்கியதாகவும் கூறினார். தனது கணவனின் இதுபோன்ற செயல்களுக்கு அவரது அம்மாவும், தனது மாமியாருமான வாசந்தி ஆதரவு கொடுத்ததாகவும், எனவே, மாறுவேடத்தில் சென்று தாக்கியதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த வாக்குமூலம் போலீசாரையே கதிகலங்க வைத்துள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.