திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் கூறினார். இது தொடர்பாக தன்னிடம் பேச வேண்டும் என தெரிவித்தார். அதற்காக என்னை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வருமாறு அழைத்தார்.
அவரது பேச்சை நம்பி நானும் அங்கு சென்றேன். அப்போது, அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பின்பு அவர்கள் எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவது குறித்து இந்த தகவலும் என்னிடம் தெரிவிக்கவில்லை. இது பற்றி கேட்டால் அனைவரும் என்னைச் சேர்ந்து மிரட்டுகின்றனர். எனவே, என்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக கேரளாவில் பாலியல் வன்கொடுமையின் வழக்குகள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.