பிறந்த நாளுக்கு துபாய் அழைத்துச் செல்லாத கோபத்தில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வனவ்டி என்ற பகுதியைச் சேர்ந்த நிகில் கண்ணா (36). ரியல் எஸ்டட் தொழில் மற்றும் பள்ளி ஒன்றையும் நடத்தி வரும் இவர், 6 ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கணவன், மனைவி இடையே பிறந்த நாளை கொண்டாடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. துபாய்க்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ரேணுகா விரும்பியுள்ளார். ஆனால், அதற்கு சம்மதிக்காத நிகில், சண்டையில் பிறந்த நாளுக்கு பரிசு கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தில் ரேணுகா, தனது கணவர் நிகிலின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில், பற்கள் உடைந்தும், மூக்கு உடைந்தும் ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், பதறிப்போன அவர், தனது மாமனார் உதவியுடன், நிகிலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, போலீசார் ரேணுகாவை கைது செய்தனர். மேலும், குடிபோதையில் ஏதாவது ஆயுதத்தை வைத்து கணவனை தாக்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.