பீகார் அருகே கணவனை இழந்த பெண்ணின் மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சுலிஹா தேவி (45) என்பவர் கணவரை இழந்து தனியே வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கிராமத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தேவியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட தேவியின் கணவர் பப்லு சிங்கும், அவரது சகோதரரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நிலத்தகராறு காரணமாக 2 பேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த குற்றவாளி கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அந்த குற்றவாளியே தேவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த குற்றவாளி எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனை இழந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை கைது செய்யக்கோரி தேவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.