மும்பை: குஜராத்துக்கு அடுத்து மும்பையில் இன்று மற்றொரு நபருக்கு எக்ஸ்.இ. வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து உலக நாடுகளுக்கு இன்னும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு உலக அளவில் வேகமாக பரவி மிரட்டிய நிலையில், ஒமைக்ரான் வகையில் மரபணு மாற்றம் அடைந்த எக்ஸ்.இ. வகை கொரோனா இங்கிலாந்தில் கண்டறியப்பட்டு இருந்தது.
இந்த எக்ஸ்.இ. வகை கொரோனா, ஒமைக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் ஒருவருக்கு இந்த வகை கொரோனா பரவி உள்ளது என தகவல் வெளியானது. இந்த வார துவக்கத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மும்பை நபர் ஒருவருக்கு எக்ஸ்.இ. வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது என செய்திகள் வெளியாகின.
எனினும், இதனை நிராகரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு புதிய வகை கொரோனா பாதிப்புதான் இது என வரையறுக்க முடியாது என கூறியிருந்தது. இந்த நிலையில், குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்.இ. வகை கொரோனாவும், மற்றொருவருக்கு எக்ஸ்.எம். வகை கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதியவகை கொரோனா பாதித்த இருவரின் உடல் நிலை குறித்தும் அதிகாரிகள் எந்த தகவலையும் அளிக்கவில்லை. இந்த சூழலில், மும்பையில் மற்றொரு நபருக்கு எக்ஸ்.இ. வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டு உள்ளது. குஜராத்தில் 67 வயதுடைய முதியவருக்கு இந்த வகை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக மற்றொருவருக்கு இந்த பாதிப்பு அறியப்பட்டு உள்ளது.
ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் இணைவால் இந்த எக்ஸ்.இ. வகை கொரோனா உருப்பெற்று உள்ளது. மற்ற வகைகளை விட அதிக பரவல் திறன் கொண்டது. எனினும், இதுபோன்று அடிக்கடி மரபணு அமைப்பில் மாற்றம் ஏற்படுவது வைரசுகளின் இயற்கை வாழ்வின் ஒரு பகுதி என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.