நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி கனிமொழி பேசினார். I.N.D.I.A எம்பிக்கள் குழுவில் இடம்பெற்று மணிப்பூர் சென்ற போது அந்த மாநில மக்கள் தெரிவித்த துயரங்களை லோக்சபாவில் விவரித்தார் கனிமொழி.
அவர் பேசுகையில் மணிப்பூரில் இரட்டை இன்ஜின் அரசு இரட்டை சீரழிவை பேரழிவை ஏற்படுத்தி மக்களை கொல்லும் அரசாக மாறிவிட்டது. மணிப்பூர் முதல்வர் வன்முறையை கட்டுப்படுத்தாமல் நடுநிலை வகிப்பதாக சொன்னார்.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை உட்பட ராணுவம் குவிக்கப்பட்டும் பயன் இல்லை. மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாண ஊர்வலமாக நடத்தப்பட்டும் மத்திய அரசு மவுனம் காக்கிறது.
அடைக்கலம் கோரிய பெண்களுக்கு மணிப்பூர் போலீஸ் பாதுகாப்பு தராமல் வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டு போனது. மணிப்பூர் விவகாரத்தில் பெண்கள் ஆணையங்கள் அனைத்தும் அமைதி காக்கின்றன.
மணிப்பூர் நிலவரம் குறித்து இன்னமும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. மகாபாரத திரெளபதியை போல மணிப்பூரிலும் பெண்கள் துகிலுரியப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டும் யாரும் உதவவில்லை. மணிப்பூர் மக்களை பிரதமர் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. மணிப்பூர் அகதி முகாம்கல் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மோசமாக உள்ளன.
குக்கி,நாகா மக்கள் மீது மணிப்பூர் முதல்வர் குற்றம் சாட்டுகிறார்; முன்னாள் அதிகாரிகளோ மணிப்பூர் முதல்வர் மீது குற்றம்சாட்டுகின்றனர். பாண்டியன் செங்கோல் நீதி வழங்கிய கதை உங்களுக்கு தெரியாது. கண்ணகி கதை உங்களுக்கு தெரியாது. நீங்கள்தான் சோழர் செங்கோல் என விழா எடுத்தவர்கள் என கனிமொழி எம்பி ஆவேசமாக பேசினார்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.