பெங்களூரூவில் இளம்பெண் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக அவரது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண் ஆஷா. இவர் ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்த்து வந்தார்.
பெற்றோருடன் வசித்து வந்தாலும், அவர்களை மதிக்காமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதால், ஆஷாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வயதானவர்கள் என்று கூட பாராமல் ஆஷா, தனது பெற்றோரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வழக்கம் போல தனது தந்தை ரமேஷுடன் சண்டையிட்டு விட்டு இரவில் தனது ரூமில் ஆஷா உறங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில், காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர்களது பெற்றோரும் போலீஸில் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, ஆஷா உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மகளுடன் ஏற்பட்ட சண்டையில் ஆஷாவை, இரவு தூஙகும் போது அவரது தந்தை ரமேஷ் விறகு கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அவரும் ஒப்புக்கொண்டார்.
பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.