சமூக வலைதளத்தில் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞர் ஒருவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து தாறுமாறாக தாக்கும் கொடூர காட்சிகள் வெளியாகி உள்ளன.
கேரள மாநிலம் கொல்லம், பூயப்பள்ளி பகுதியை சார்ந்தவர் ராகுல் என்பவர் கடந்த திங்கள் கிழமை வள்ளிக்குந்நம் பகுதியை சார்ந்த அச்சு என்ற இளைஞரை நேரில் வரவழைத்துள்ளார். அப்போது, தன்னை சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தியதாக கூறி முதலில் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க மிரட்டி கூறிவிட்டு, குனிந்த படி மன்னிப்பு கேட்க சென்ற அச்சு என்ற இளைஞரை ராகுல் என்பவர் கண்மூடித்தனமாக தாறுமாறாக தாக்கியுள்ளார்.
இந்த காட்சிகள் ராகுலின் நண்பர்கள் ஒரு சிலர் செல்போன்களில் பதிவு செய்து இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து, தாக்குதல் வீடியோவை கண்ட கொல்லம், கருநாகப்பள்ளி போலீசார் ராகுல் என்பவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கு, பலாத்கார வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய குற்றவாளி ராகுல் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்கு உள்ளான அச்சு தற்போது கொல்லம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.