தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் ஜி.என்.ஆர்.எம் பகுதியை சேர்ந்த வாலிபர் நவீன். அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இரண்டு பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலில் இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மகளின் காதல் பற்றி தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீனை, அழைத்து காதலை கைவிடும்படி மிரட்டி உள்ளனர். அந்த பெண்ணை கைவிட தயாராக இல்லாத நவீன், திருமல் என்பவர் மூலம் காதலியின் குடும்பத்தாருடன் சமாதானம் பேச முயற்சி எடுத்தார்.
இதனை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்து கொண்ட அந்த பெண்ணின் உறவினர்கள் சமாதானம் பேசலாம் என்று நவீன் மற்றும் திருமல் ஆகியோரை குட்டுப்பள்ளிக்கு வரவழைத்தனர். அப்போது, அங்கு மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த பெண்ணின் உறவினர்கள், நவீனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த ஆணவபடுகொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
நவீன் மற்றும் அவருடைய காதலி ஆகியோர் இரண்டு வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.