பீகாரில் அரசு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில் இளைஞரை கடத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் குமார் என்பவர் ஆசிரியராக இருந்து வருகிறார். இவர் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். இதைத் தொடர்ந்து, படேபூரின் ரெபுராவில் உள்ள உத்கிராமித் மத்திய வித்யாலயா பள்ளியில் பணி வழங்கப்பட்டது.
இந்த உத்தரவு வந்து 24 மணிநேரத்தில், பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த கௌதம் குமாரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவரின் ஆட்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
கடத்திச் சென்ற இடத்தில் கௌதம் குமாரை துப்பாக்கி முனையில் வைத்து, தனது மகள் சாந்தினிக்கு தாலி கட்டுமாறு மிரட்டி, திருமணம் செய்து வைத்துள்ளார். துப்பாக்கியை பார்த்து பயந்து போன ஆசிரியரும் வேறு வழியின்றி தாலியை கட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பீகாரில் அரசு வேலை அல்லது நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்களை கடத்திச் சென்று திருமணம் செய்வது வாடிக்கையாகி விட்டது. அண்மையில் கால்நடை மருத்துவரை கடத்திச் சென்று பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.