கோவை : கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணித் தெரிவித்துள்ளார்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது., கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி,பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும். அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தில் திமுகவினர் தொடர்ந்து அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியதன் அடிப்படையில், ஆட்சியர் அறிக்கைவிட்டு வெளியூர் ஆட்கள் இருக்ககூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும்,இன்னும் கோவையின் பல்வேறு இடங்களில் வெளியூர் ஆட்கள் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதிமுக வெற்றி பெறும் வார்டுகளில் கூட திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு அவர்கள் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வாக்கு சாவடிமையத்திலும் தேர்தல் அலுவலர்களும் ,காவலர்களும் நேரடியாக கண்கானிக்க வேண்டும் என அவர் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.