திமுக வைத்திருந்த நீட் ரத்து ரகசியம் என்ன ஆச்சு?…அப்போ உதயநிதி சொன்னதெல்லாம் பொய்யா?: எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் சரமாரி கேள்வி…!!

சேலம்: திமுகவிடம் உள்ள ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் அளித்த வாக்குறுதி எங்கே போனது? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட வனவாசி பகுதியில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நடைபெற்றது. இதில் வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார். திமுக என்றாலே தில்லு முள்ளு செய்யக்கூடிய கட்சி என்பதால் அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்.

திமுகவினர் சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து ஆட்சி அமைத்தனர். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை மறந்துவிட்டார்கள். திமுக ஆட்சி அமைந்த கடந்த எட்டு மாதத்தில் என்ன திட்டத்தை நிறைவேற்றினார்கள் அக்கட்சியினர்?

தமிழக முதலமைச்சர் சைக்கிள் பயணம், நடைபயிற்சி, டீக்கடையில் டீ குடிக்கும் காட்சிகளைதான் பார்க்க முடிகிறது. திரும்பும் இடமெல்லாம் அவர் முகம் தான் தெரிகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் காட்சிகளை பார்க்க முடியவில்லை. நீட் தேர்வை எதிர்கொள்ள கிராம பகுதி மாணவ மாணவியருக்கு இருக்கும் சிரமத்தை கருத்தில் கொண்டு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதன்மூலம் 574 பேர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுகுடிநீர் திட்டம், அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி, வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், இப்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 15 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 75 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள். மேலும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே… ஏன் செய்யவில்லை? ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், நான் கொண்டு வந்த திட்டம் சிறந்த திட்டம் என்பதால் அதை பின் தொடர்கின்றனர்.

மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதை வேட்பாளர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திமுக கட்சி, பணத்திற்கு ஆசைப்பட்டு பொங்கல் நேரத்தில் மக்களின் வயிற்றில் அடித்தனர் எனக்கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

37 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

42 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

1 hour ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

3 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

This website uses cookies.