கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று கோவையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
கோவை மாவடத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களியை ஆதரித்து சிவானந்தாகலானியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.
பிரச்சாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது,கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது. கோவை வ.உ.சி திடலில் பிரமாண்டமான கூட்டம் நடத்தியது 2011 ல் ஆட்சி அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது. தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அப்போது அகற்ற முடிந்தது
பெரியார்,அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் எண்ணங்களை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா. மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. மக்களுக்காக 5.5 லட்சம் வீடுகளை மக்களுக்கு கட்டிகொடுத்தவர் ஜெயலலிதா.
இந்த திட்டங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாத திட்டங்களாக இருக்கின்றது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தடம் பிறழாமல் அவரை தொடர்ந்து செய்து காட்டியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. 100 யூனிட் மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், வரிவருவாயில் 3ல் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக்கியது என பல திட்டங்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டன.
தமிழகத்தில் 52 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வித்திட்டவர் ஜெயலலிதா.கொரொனா தொற்றை அதிமுக அரசு சிறப்பாக கையாண்டது. திமுக அரசு அதை சரியாக கையாளவில்லை. திமுகவினர் ஏதாவது திட்டங்கள் உதவிகள் கொடுத்தார்களா?
10 ஆண்டுகளாக சிறப்பான அதிமுக ஆட்சி நடைபெற்றது. காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் போராடி தீர்ப்பனை கொண்டு அரசாணை பெற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதா. எந்த குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது. 50 ஆண்டுகளில் இல்லாத சாதனையை 5 ஆண்டுகளில் கோவையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் செய்து காட்டியது திமுக சட்டமன்ற தேர்தலின் பொது பொய் வாக்குறுதிகளை கொடுத்தது.
505 வாக்குறுதிகளை திமுக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தது.அதை மக்கள் நம்பினார்கள். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த கட்சி திமுக முதல் கையெழுத்து நீட் என்றார்கள். இன்னும் செய்யவில்லை. 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என்றார்கள். இதனை நம்பி 50 லட்சம் பேர் நகை அடகு வைத்தனர். இப்போது யாருக்கு தகுதி என ஆய்வு செய்து வருகின்றனர்.37 லட்சம் பேர் நகை அடகு வைத்து நடுத்தெருவில் இருக்கின்றனர்.13 லட்சம் பேர் மட்டும் தகுதி என்கின்றனர்.
பெண்களுக்கு 1000 ரூபாய் வீடு தோறும் உதவி தொகை வரவில்லை. கடுமையான கோபத்தில் மக்கள் இருக்கின்றனர். 2500 ரூபாயுடன் பரிசு தொகுப்பை அதிமுக அரசு கொடுத்தது. கொடை வள்ளல் ஸ்டாலின் 5000 கொடுக்க வேண்டும் என்றார். இப்போது அவர் எதுவும் கொடுக்கவில்லை பொங்கல் பரிசு பெருட்களை வடநாட்டில் இருந்து வாங்கி இருக்கின்றனர். இங்கு வாங்கினால் தெரிந்து விடும் என வட மாநிலத்தில் வாங்கி இருக்கின்றனர். பொங்கலுக்கு மக்களுக்கு கொடுத்த அரிசியை மாட்டுக்கு போட்டால் அந்த மாடு நம்மை முறைக்குது.
பொங்கல் பரிசு பொருட்களின் தரம் குறித்து விசாரணை கமிசன் அமைத்து விசாரணை செய்ததில் அது உண்மை என நிரூபணம் ஆகியிருக்கின்றது. பெரியார் கண்ட கனவை நனவாக்கியது ஜெயலலிதா மட்டு்ம் தான். உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது ஜெயலலிதா.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும். அதிமுக ஆட்சிதான் சிறந்த்து என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இரட்டை இலை சின்னத்தை நம்பி களத்தில் இருப்பவர்களை வெற்றி பெற வைக்கும் கடமை அதிமுக கட்சியினர் அனைவருக்கும் இருக்கின்றது.
சின்ன சரிவு. அதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இயற்கையே அதை சரி செய்துவிட்டது
தமிழகத்தில் ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கின்றது. மக்கள் நம்மை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்
இதில் கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், தாமோதரன், அமுல் கந்தசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.