2024 ஐபிஎல் திருவிழா ஆரம்பம்… சேப்பாக்கத்தில் முதல் போட்டி : வெளியானது அட்டவணை!!
இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என அதிகார பூர்வ அறிவுப்பு வெளியாகியது. எல்லா ஆண்டும் வழக்கமாக ஐபிஎல் தொடங்கும் முன் இரு மாதங்களுக்கு முன்பே அதற்கான அட்டவணை வெளியாகி விடும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் போட்டியின் அட்டவணையை சற்று தாமதமாக வெளியிட்டுள்ளனர்.
இதில் சென்னையில் முதல் போட்டி நடக்க போவதாகவும், சென்னையும், குஜராத் அணியும் முதல் போட்டி விளையாட போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள அட்டவணையில் முதல் போட்டியாக வருகிற மார்ச்-22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது.
ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் தெரிவித்தது போல ஐபிஎல் தொடரின் அட்டவணையில் பாதி போட்டிக்கான அறிவிப்பை மட்டும் வெளியிட்டுயுள்ளனர். அந்த அட்டவணையில் மார்ச் -22 முதல் ஏப்ரல் – 7 ம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மட்டும் வெளியாகி இருக்கிறது. மீதம் நடைபெறும் போட்டிக்கான அட்டவணையை நாடுளுமன்ற தேர்தலின் தேதியை அறிவித்ததற்கு பிறகு வெளியிடுவார்கள். மொத்தம் 17 நாட்களில் 21 போட்டிகள் நடைபெற உள்ளது.
தற்போது, வெளியிட்டுள்ள இந்த அட்டவணையின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த 4 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலும் அடுத்த இரண்டு போட்டிகள் வைசாக் மற்றும் ஐதராபாத்திலும் விளையாடவுள்ளது. ஐபிஎல்-ன் முதல் போட்டி சென்னையில் நடைபெறுவதால் சென்னை அணியின் ரசிகர்கள் தல தோனியின் தரிசனத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.