50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான 50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தத் தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 5ம் தேதி மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல, உலகமே பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 5 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 19-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணையை கீழே பார்க்கலாம்..
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.