கோட்டை விட்ட இலங்கை… 3வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் : புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!!

கோட்டை விட்ட இலங்கை… 3வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் : புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!!

உலகக்கோப்பையின் 30-வது லீக் போட்டியானது இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் தொடக்கட்ட வீரர்களாக பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன இருவரும் களமிறங்கினர். 6-வது ஓவரில் திமுத் கருணாரத்ன 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து குசல் மெண்டிஸ் களமிறங்க அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க அரைசதம் அடிக்காமல் 46 ரன்னில் வெளியேறினார். பின்னர் சதீர சமரவிக்ரம மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வந்தனர். இருப்பினும் குசல் மெண்டிஸ் 39 ரன்னிலும், சதீர சமரவிக்ரம 36 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்கள். அதன் பின் களமிறங்கிய சரித் அசலங்கா 22, தனஞ்சய டி சில்வா 14, துஷ்மந்த சமீர 1 என ரன்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசியில் இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் மகேஷ் தீக்ஷனா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்ந்தனர்.

நிதானமாக விளையாடி வந்த இருவரும் ஃபசல்ஹக்கிடம் அடுத்தடுத்த ஓவரில் ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்னும் மற்றும் மகேஷ் தீக்ஷனா 29 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக இலங்கை அணி 49.3 ஓவரில் 241 ரன்கள் எடுத்து 10 விக்கெட்களையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்டையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டையும் , அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான் ஆகியோர்கள் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடங்கிய 4 பந்திலே அதிரடி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் டக் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ரஹ்மத் ஷா மறுபுறம் இருந்த இப்ராஹிம் சத்ரான் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள்.

நிதானமாக விளையாடி வந்த இப்ராஹிம் சத்ரான் அரைசதம் அடிக்காமல் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் விளையாடி வந்த ரஹ்மத் ஷா அரைசதம் விளாசி அதிரடி காட்டி வந்தார். இருப்பினும் கசுன் ரஜிதா வீசிய பந்தில் ரஹ்மத் ஷா 62 ரன் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து கேப்டன் ஹெஷ்மத்துல்லாஹ் ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஜோடி சேர்த்தனர். அவர்களின் கூட்டணியை இலங்கை அணி பிரிக்க முடியாமல் திணறி வந்தது.

ஆனாலும் தங்களின் சிறப்பான ஆட்டத்தால் இருவரும் அரைசதம் விளாசினார்கள். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 242 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஒமர்சாய் 78* ரன்களுடனும், ஷாஹிதி 58* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க விக்கெட்டையும் , கசுன் ராஜித 1 விக்கெட்டை பறித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

13 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

13 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.